யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரண வீடு ஒன்றில் பங்கேற்றிருந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆறு பேர்,
நவாலியிலிருந்து நோய் அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்ற பெண்,
விசுவமடு ம.வி பாடசாலையில் கல்வி கற்பிக்கும் அச்சுவேலியைச் சேர்ந்த ஆசிரியை ஆகியோரும், (தேராவில், விசுவமடு, தருமபுரம் பகுதி ஆசிரியர்கள் சேர்ந்து பயணிக்கும் பேருந்தில் சென்று வருபவர்)
<மன்னாரில்
மன்னாரில் கொமர்சல் கிறடிற் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஐவர்,
மன்னார் நகர் சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணியாற்றும் இருவர்,
பொாலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்,
மாந்தை மேற்க்கில் இருவர்,
வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் இருவருக்கும் என மொத்தமாக 20 பேருக்கு வடக்கில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார்