கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் சற்று முன்னர் அருவிக்குத் தெரிவித்துள்ளன.
நேற்றைய தினம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாக இன்று காலை அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரங்களில் புதிய மரணம் பற்றிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.
சற்று முன்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நபர் பருத்தித்துறை வீதி, நல்லூர் எனும் முகவரியைச் சேர்ந்த 59 வயதுடைய R.சிவசண்முகநாதன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மரணத்துடன் யாழ்.குடாநாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்