திருகோணமலை மாவட்டம், பூம்புகார் கிராம சேவகர் பிரிவில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் 56 பேரால் திருமலை நகர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பூம்புகார் கிராம சேவகர் பிரிவில் 56 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட 56 பேரில் அனேகமானோர் திருகோணமலை நகரப் பகுதியில் பல இடங்களில் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களாவர்.
அதனால் திருகோணமலை நகர்ப்பகுதியில் மேலும் பலர் கொவிட் நோயுடன் அடையாளங்காணப்படக்கூடும் என மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.இதையடுத்தே இன்று இரவு 8.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பூம்புகார் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை