யாழ். மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உட்பட கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 11 பேரின் விபரங்கள் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டன.
இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்திருப்பதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த 11 மரணங்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்த மரணமும் சேர்க்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் யாழ். போதனாவில் சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் உயிரிழந்த நிலையில் அவ்விருவருக்கும் கொரோனா தொற்று இருந்தமை கண்டறியப்பட்டு கொவிட்-19 மரணங்களாக வட மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர். கேதீஸ்வரன் அறிவித்திருந்தார்.இந்நிலையில் குறித்த இரு மரணங்களில் ஒன்று தேசிய கொவிட்-19 மரணங்களில் சேர்க்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய ஆண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.
சுவாசக் குழாய் தொற்றுடன் குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் இடது காலின் கீழ்ப் குதியில் ஏற்பட்ட காயம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுதவிர,
இனாமலுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 03 (கொள்ளுப்பிட்டி) பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
பெந்தோட்டை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 55 வயதுடைய ஆண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கெலிஓயா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கட்டுவன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 71 வயதுடைய பெண் ஒருவர் கடந்த மே-02 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சீதுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய பெண் ஒருவர் கடந்த மே-04 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
மல்லவகெதர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 78 வயதுடைய பெண் ஒருவர் ஏப்ரல்-30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
உடவளவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர் கடந்த பெப்ரவரி-21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
புலுதொட்ட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 43 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த ஏப்ரல்-29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த 11 பேருடன் சேர்த்து இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்று காணரமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கொழும்பு, யாழ்ப்பாணம்