Friday 3rd of May 2024 08:17:58 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா அச்சுறுத்தல்; மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்களுக்கு விடுமுறை!

கொரோனா அச்சுறுத்தல்; மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்களுக்கு விடுமுறை!


கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலை காரணமாக மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கு விடுமுறை வழங்குதவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்களுக்குஇ சுகயீன விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.

கொவிட்- 19 பரவல் காரணமாக ஆசிரிய மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசிரிய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் விருப்பத்திற்கு அமைய மாணவர்கள் கல்லூரியில் இருந்து இன்றைய தினம் வெளியேற முடியும் என்றும் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எம். ஜ. எம். நவாஸ் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE