யாழ்ப்பாணம் கொரோனா ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை,
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தருமபுரம் 03ஆம் யூனிற் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொழும்பில் விருந்தகம் ஒன்றில் பணியாற்றியிருந்த நபர் கண்டாவளைக்கு திரும்பியிருந்த நிலையில் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 54 பேருக்கு மேற்கொள்ளப்பட் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அவற்றிலேயே மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு