கிழக்கு மாகாணத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்று எண்ணிக்கை 623 ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (டிச-15) Nலும் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்முனை தெற்கு - 1
அக்கரைப்பற்று - 8
அட்டாளைச்சேனை - 4
பொத்துவில் -5
நாவிதன்வெளி - 1
அதன் மூலம் அக்கரைப்பற்று சந்தை கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 446 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 623 ஆக அதிகரித்துள்ளது.
பிராந்திய அடிப்படையில்,
கல்முனை சுகாதார பிராந்தியத்தில் - 487 பேர்
அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் - 20 பேர்
மட்டக்களப்பு மாவட்டம் - 98 பேர்
திருகோணமலை மாவட்டம் - 18 பேர்
இவ்வாறு 623 அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை