வவுனியா கொத்தணியில் நேற்றைய ஒரே நாளில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டானிச்சூரில் ஏற்பட்ட தொற்ற வவுனியா கொத்தணியாக உருவெடுத்துள்ளது.
நேற்றைய தினம் (ஜன-11) வவுனியா வடக்கை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த 31 பேரில் 27 பேர் வவுனியா கொத்தணியைச் சேர்ந்தவர்களும் அடையாளனம் காணப்பட்டிருந்தனர்.இதேபோன்று யாழ் பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பட்டானிச்சூர் தொற்று பரம்பலின் தொடர்ச்சியாக ஏற்பட்ட வவுனியா கொத்தணியில் இதுவரை 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த - 13 நபர்களுக்கும்
வவுனியா பொது வைத்தியசாலையில் - 07 நபர்களுக்கும்
புளியங்குளம் பகுதியில் - ஒருவருக்கும்
வவுனியா நகர்பகுதி வர்த்தகரகள் - 103 நபர்களுக்கும்
என இவ்வாறு 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா