யாழ் ஆய்வுகூட பரிசோதனையில் கிளிநொச்சியைச் சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 379 பேரின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் - 10
வவுனியா மாவட்டம் - 01
மன்னார் மாவட்டம் - 01
வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் - 05
என 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட தரப்பில் வெளியிடப்பட்ட நாளாந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா