Friday 26th of April 2024 02:21:35 AM GMT

LANGUAGE - TAMIL
.
திருநெல்வேலி-பாரதிபுரம் கிராமத்தில் மேலும் ஐவருக்கு தொற்றுறுதி!

திருநெல்வேலி-பாரதிபுரம் கிராமத்தில் மேலும் ஐவருக்கு தொற்றுறுதி!


யாழ். திருநெல்வேலி-பாரதிபுரம் கிராமத்தில் மேலும் ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடம் ஆகிய ஆய்வுகூடங்களில் இன்று (ஏப்-20) வடமாகாணத்தில் 643 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

குறித்த 15 பேரில் யாழ் குடாநாட்டில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

குறித்த எழுவர் தொடர்பில் தெரிவிக்கும் போதே வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி-பாரதிபுரம் கிராமத்தில் மேலும் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சண்டிலிப்பாய் சுகாதார அதிகாரி பிரிவில் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

திருநெல்வேலி-பாரதிபுரம் கிராமம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE