பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை மற்றும் உயிரிழந்த மூதாட்டிகள் இருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் இன்று (ஒக்-14) 120 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
யாழ். போதனா வைத்தியசாலையில் - 05 பேர் (பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட)சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - 03 பேர்
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 03 பேர்
சங்கானை பிரதேச வைத்தியசாலையில் - ஒருவர்
காங்கேசன்துறை கடற்படை முகாமில் - 02 பேர்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 05 பேர்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - 02 பேர் (உயிரிழந்த மூதாட்டிகள் இருவர்)
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர்
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் - ஒருவர்
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் - ஒருவருக்கு
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மல்லாவி, முல்லைத்தீவு, வவுனியா