யாழ். ஆய்வுகூட்களில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேர் உட்பட 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகிய ஆய்வுகூடங்களில் இன்றைய தினம் (ஏப்-21) 788 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு வடக்கு மாகாணத்தில் 21 பேர் உட்பட 38 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக,
யாழ். மாவட்டம் - 15யாழ். சுகாதார அதிகாரி பிரிவு - 11 பேர் (அனைவரும் பொலிசார்)
யாழ். போதனா வைத்தியசாலையில் - 02 பேர்
நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவு - 01
கோப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு - 01
மன்னார் மாவட்டம் - 05 (மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்)
முல்லைத்தீவு மாவட்டம் - 01 (மல்லாவி ஆதார வைத்தியசாலையில்)
இவ்வாறு வட மாகாணத்தில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன்,
வவுனியா மாவட்டம் - 15
பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் - 13
வெள்ளாங்குளம் இலங்கை விமானப்படை முகாம் - 02
கிளிநொச்சி மாவட்டம் - 02 (பாரதிபுரம் தனிமைப்படுத்தல் நிலையம்)
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, நல்லூர்