Saturday 4th of May 2024 05:26:11 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். போதனா ஆய்வுகூட பரிசோதனை: திருகோணமலையில் 12 - யாழில் 09 பேர் உட்பட 52 பேருக்கு கொரோனா!

யாழ். போதனா ஆய்வுகூட பரிசோதனை: திருகோணமலையில் 12 - யாழில் 09 பேர் உட்பட 52 பேருக்கு கொரோனா!


யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் திருகோணமலை மாவட்டத்தில் 12 பேர், யாழ். மாவட்டத்தில் 09 பேர் உட்பட 52 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்றைய தினம் (ஜூலை-13) 711 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வுகூட வட்டாரங்கள் அருவிக்கு தெரிவித்தன.

குறித்த தவல்களின் அடிப்படையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் - 09 பேர்

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 07 பேர் (32, 33, 66, 72 வயது ஆண்கள, 27, 63, 68 வயது பெண்கள்)

யாழ். போதனா வைத்தியசாலையில் - 02 பேர் (32 வயது பெண், 37 வயது ஆண்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் - 06 பேர்

மல்லாவி சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் - 04 பேர் (49 வயது ஆண், 12, 16, 45 வயது பெண்கள்)

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (39 வயது பெண்)

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் - ஒருவர் (77 வயது ஆண்)

கிளிநொச்சி மாவட்டத்தில் - 03 பேர்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - 02 பேர் (22, 50 வயது பெணஒ;கள்)

பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - ஒருவர் (23 வயது ஆண்)

மன்னார் மாவட்டத்தில் - 03 பேர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் - 03 பேர் (51 வயது ஆண், 28, 51 வயது பெண்கள்)

வவுனியா மாவட்டத்தில் - 02 பேர்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (44 வயது ஆண்)

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - ஒருவர் (29 வயது ஆண்)

திருகோணமலை மாவட்டத்தில் - 12 பேர்

குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 10 பேர் (5 வயது - 59 வயதுக்கு உட்பட்டோர்)

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 02 பேர் (38, 43 வயது ஆண்கள்)

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் - 17 பேர்

பம்பைமடு கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையத்தில் - 03 பேர் (4, 7, 9 வயது சிறுமிகள்)

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் - 13 பேர் (பெண்கள் 13 பேர்)

வசாவிளான தனிமைப்படுத்தல் நிலையத்தில் - ஒருவர் (59 வயது பெண்)

இவ்வாறு வட மாகாணத்தில் 23 பேருக்கும், கிழக்கு மாகாணம் திருகோணமலையில் 12 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் 17 பேருக்கும் என 52 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மல்லாவி, மன்னார், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, திருகோணமலை, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE