Saturday 1st of June 2024 07:18:16 AM GMT

LANGUAGE - TAMIL
ரஃபேல் நடால்
இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தார் ரஃபேல்!

இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தார் ரஃபேல்!


இத்தாலி பகிரங்க டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சர்வதேச தர வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ரஃபேல் நடால் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியினை பெற்றுள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் இத் தொடரில் 18 ஆம் திகதி இடம்பெற்ற அரையிறுதி ஆட்டமொன்றில் ரஃபேல் நடால் கிறீசை சேர்ந்த சிட்சிபாஸ்சை 6-3 ,6-4 என்ற நேர் செட்டின் மூலம் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் களிமண்ணினால் ஆன தரையில் போட்டியிட்டு ரஃபேல் நடால் முன்னேறியுள்ளமை இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடிய ரஃபேல் நடால் சக வீரருக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ரஃபேல் நடால் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE