Friday 26th of July 2024 10:07:26 PM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது!

வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது!


வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை வவுனியாவில் பல்வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது தோணிக்கல், கோயில்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளிலே ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

தோணிக்கல் பகுதியி்லிருந்து 219 மில்லி கிராம் ஹெரோயினும், கோயில்குளம் பகுதியிலிருந்து 129 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

ஹெரோயினை வைத்திருந்த 51, 44 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE