ஈழப் புரட்சி அமைப்பின் இளைஞர் மாநாடு முல்லைத்தீவில் நேற்று நடைபெற்றது.
இதில் பல இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் ஈரோஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் பலர் பிரசன்னமாகியிருந்தனர்.
இளைஞர்களை முன்னிலைப்படுத்தி அரசியலில் ஈடுபடுகின்ற ஒரு முயற்சியாகவே இந்த மாநாடுகள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டது.
கேள்விகளை எழுப்பி ஏன்? எதற்கு? என்ற அடிப்படையில் விடயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு இளைஞர்கள் துணிந்து முன்னிற்கவேண்டும் என்ற கருத்துக்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டன.