Friday 17th of May 2024 06:27:27 AM GMT

LANGUAGE - TAMIL
பொலிஸார் தேடியதால் தனக்குத் தீ மூட்டி தொடருந்து முன் பாய்ந்த குடும்பஸ்தர் தற்கொலை! (படங்கள்)

பொலிஸார் தேடியதால் தனக்குத் தீ மூட்டி தொடருந்து முன் பாய்ந்த குடும்பஸ்தர் தற்கொலை! (படங்கள்)


பொலிஸார் தேடியதால் தன்னைத் தானே தீ மூட்டி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சற்று முன்னர் யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான இராஜசுந்திரம் இராஜசீலன் (வயது 32) என்ற குடும்பஸ்தர் இன்று காலை 7.00 மணியளவில் கொடிகாமம் பகுதியில் தொடருந்தின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

பருத்தித்துறையில் நேற்று முன்தினம் கடை ஒன்றுக்கு தீ குடும்பஸ்தரை பொலிஸார் தேடியிருக்கின்றனர்.

இன்று காலை தொடர்புகொண்டவர்களுக்கு தான் கொடிகாமம் பகுதியில் நிற்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் காலை தொடருந்து முன்பாக பாய்ந்த அவர் தற்கொலை செய்திருக்கின்றார். அவர் தொடருந்துடன் மோதுவதற்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE