Friday 17th of May 2024 05:51:27 AM GMT

LANGUAGE - TAMIL
கழிவொயில் ஊற்றி ஓவியத்தை அழிக்க முற்பட்ட விசமிகள்! மீண்டும் வரைந்து பதிலடி கொடுத்த இளைஞர்கள்!

கழிவொயில் ஊற்றி ஓவியத்தை அழிக்க முற்பட்ட விசமிகள்! மீண்டும் வரைந்து பதிலடி கொடுத்த இளைஞர்கள்!


யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் சுவரோவியங்களுக்கு விசமிகள் கழிவுஒயில் ஊற்றியிருந்த நிலையில் ஒரே நாளில் மீண்டும் அதே இடத்தில் ஓவியம் வரைந்து இளைஞர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொடிகாமம் பகுதியில் மதில் சுவர் ஒன்றின் மீது இளைஞர்கள் இணைந்து கடந்த சில நாட்களாக ஓவியம் வரைந்திருந்த நிலையில்,

நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத விசமிகள் குறித்த ஓவியத்தின் மீது கழிவொயில் வீசி அதனை அழிப்பதற்கு முயன்றிருக்கின்றனர்.

மறுநாள் உடனடியாகச் செயற்பட்ட இளைஞர்கள் அதே இடத்தில் மீண்டும் ஓவியம் வரைந்து பதிலகொடுத்துள்ளமையை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே குறித்த ஓவியத்தை அழித்த விசமிகள் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

IMAGE_ALT

முதலில் வரையப்பட்ட ஓவியம்

IMAGE_ALT

விசமிகள் அழித்த பின்னர்>

IMAGE_ALT

மீண்டும் வரையப்பட்டதன் பின்னர்


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE