தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொள்கிறார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், அமெரிக்க முக்கியஸ்தர் ஒருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ போன்ற அரசியல் பிரமுகர்களையும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களையும் சந்தித்து, பிராந்தியப் பிரச்சினைகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.