Friday 17th of May 2024 06:27:26 AM GMT

LANGUAGE - TAMIL
விமானத்தில் பயணம் செய்த இருவர் உயிரிழப்பு!

விமானத்தில் பயணம் செய்த இருவர் உயிரிழப்பு!


கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட வெளிநாட்டு விமானத்தில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து எயார் லைன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குவதற்கு விமானி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பில் விமான நிலையத் தகவல்கள் குறிப்பிடுவதாவது,

285 பயணிகளை ஏற்றிச் சென்ற மேற்படி விமானத்தில் 77 வயதுடைய பெண் மற்றும் 64 வயதுடைய ஆணொருவருக்கும் விமானத்தில் வைத்து சுகயீனம் ஏற்பட்டு அவதியுற்றுள்ளனர்.

இதனையடுத்து விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதோடு அவர்களை விமான நிலைய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனாலும், விமானத்தில் சுகயீனமடைந்ததாக கூறப்படும் இரண்டு நபர்களும் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷிய பெண் மற்றும் ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE