Friday 17th of May 2024 02:50:55 AM GMT

LANGUAGE - TAMIL
பால்மாவிற்கான வற் வரி நிவாரணத்தை வத்தகர்கள் இன்னும் வழங்கவில்லையென குற்றஞ்சாட்டு!

பால்மாவிற்கான வற் வரி நிவாரணத்தை வத்தகர்கள் இன்னும் வழங்கவில்லையென குற்றஞ்சாட்டு!


அரசாங்கம் வழங்கிய வற் வரி நிவாரணத்தை இதுவரையில் பால்மாவுக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு தெரிவித்துள்ளது.

வற் வரி நிவாரணத்தின் அடிப்படையில் 400 கிராம் பால் மா பொதியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ள வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சின் செயலாளர் ஜி.கே.எஸ்.என்.ராஜதாச, இது தொடர்பில அடுத்த வாரம் தொடக்கம் ஆராய நுகர்வோர் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறினார்.

இந்த நிவாரணம் ஜனவரி மாதம் முதல், புதிய தயாரிப்புக்களுக்கு வழங்கப்படும் என்று பால்மா வர்த்தகர்கள் தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் விலை குறைக்கப்படவில்லை என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE