Friday 17th of May 2024 06:27:28 AM GMT

LANGUAGE - TAMIL
கனேடியர்களின் உயிரிழப்புக்கு ஈரான் பதில் சொல்லியே ஆகவேண்டும்!

கனேடியர்களின் உயிரிழப்புக்கு ஈரான் பதில் சொல்லியே ஆகவேண்டும்!


கனடா குடிமக்களின் உயிரிழப்புக்கு ஈரான் பதில் சொல்ல வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

உக்ரைன் விமானத்தை ஈரான் தாக்கி அழித்தது கண்டனத்திற்கு உரியது. இந்த விமானத்தில் இருந்த 63 கனேடிய பிரஜைகள் பலியாகியுள்ளனர். இதனை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்த உயிரிழப்பு குறித்து ஈரான் பதிலளித்தே ஆக வேண்டும் எனவும் எனவும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.

இது தொடர்பாக விசாரணையை நாங்கள் துவங்கியுள்ளோம். விரைவில் ஆதாரங்கள் வெளியாகும். எனவும் ட்ரூடோ தெரிவித்தார்

இதேவேளை, இந்த விமானம சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த விசாரணைகளில் கனடா அரசின் உதவியையும் உக்ரேன் நாடியுள்ளது.

பொதுவாக விமான விபத்து தொடர்பான ஆராய்ச்சிகள், விசாரணைகளை கனடா அரசிடம் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE