யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் உயிரிழந்த குடும்பஸ்தர் பொய்க்குற்றச்சாட்டு அவமானம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய அண்ணன் கண்ணீர் மல்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொடிகாமம் பகுதியில் பருத்தித்துறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான என்பவர் தன்னைத் தானே தீ மூட்டி தொடருந்தின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
பருத்தித்துறையில் கடை ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் அவர் நேற்று பொலிஸாரால் தேடப்பட்டதாகவும் அவர் தலைமறைவாகியிருந்ததாகவும் இன்று காலை அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த அவருடைய அண்ணன், அருவி இணையத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், ’கடை எரிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றபோது எனது தம்பி கொழும்பில் நின்றிருந்தார். அவர் தேடப்படுகின்ற சம்பவம் தொடர்பில் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று காலை அவர் என்னுடன் தொடர்புகொண்டார். என் மீதான குற்றச்சாட்டு அபாண்டமானது. இந்த அவமானத்துடன் இனி வாழ முடியாது. என்னுடைய பிள்ளைகளை தத்தெடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய கடையையும் பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டார். என்னுடைய தம்பி மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாடே அவர் உயிர்விடக் காரணம் என்று ககோதரன் கதறி அழுதமை மனதை உருக்குவதாக அமைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.