Friday 17th of May 2024 05:51:27 AM GMT

LANGUAGE - TAMIL
மன்னாரில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி மரணம்!

மன்னாரில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி மரணம்!


மன்னாரில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி ஹெத்தாகட ஹெட்ட வீரகொல்லாவ பிரதேசத்தைச் சேந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பி.சீ.பியரத்தின (வய- 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் காய்ச்சல் என தெரிவித்து கடந்த 10 ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (12) மாலை உயிரிழந்தார்.

இவரின் மரண விசாரனையை முசலி மரண விசாரனை அதிகாரி ஏ.ஆர் நசீர் மேற்கொண்டபின் சடலத்தை அவரின் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் நான்கு பொலிஸார் காய்ச்சல் என மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இவர்களும் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனரா? என பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE