எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்துடன் இணைந்து தமிழ் விருட்சம் அமைப்பும் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பெரியமடு கிராமத்தில் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு பொங்கல் திருநாளை சிறந்த முறையில் கொண்டாட இவ் உதவிகளை எம்.ஜி.ஆர் நற்பணி மன்றம் வழங்கி வைத்திருந்தது.
இதன்போது எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் நிர்வாகத்தினரும் கலந்துகொண்டிருந்ததுடன் பெரியமடு கிராம மக்களின் பல்வேறு குறைகளையும் கேட்டறிந்துகொண்டனர்.