Friday 17th of May 2024 03:13:08 AM GMT

LANGUAGE - TAMIL
வவுனியாவில் இடம்பெற்ற தமிழர் கல்வியும் அபிவிருத்தியும் கருத்தாய்வுக்களம்!

வவுனியாவில் இடம்பெற்ற தமிழர் கல்வியும் அபிவிருத்தியும் கருத்தாய்வுக்களம்!


வன்னி ரோட்டறக் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழரும் கல்வி அபிவிருத்தியும் எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வு களம் நிகழ்வு வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்றது.

தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் எதிர்காலம் தொடர்பிலும் புத்திஜீவிகள் கல்வியியலாளர்கள் சமூக நலன் விரும்பிகள் பலர் கலந்துகொண்டு இடம்பெற்ற இக்கருத்தாய்வு களத்தினை பிரபல வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் ச. விமலச்சந்திரன் தொகுத்து வழங்கியிருந்ததார்.

யாழ்ப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சு. சிவகுமாரன் ஐ. டி. எம் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி வி. ஜனகன் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆசிரியர் ல. சதீஸ்குமார் சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞான விரிவுரையாளர் செ. ஜேகனேந்திரன் மற்றும் சட்டக்கல்லூரி மாணவன் கி. கிஷாந் ஆகியோர் கருத்தாய்வு களத்தின் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இடம்பெற்ற இக்கருத்தாய்வுகளம் மாதாந்தம் வேறுபட்ட தொனிப்பொருளில் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE