எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அளவில் நாட்டில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வயதெல்லை இன்றி சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் முதலாம் திகதிக்குள் தொழில் பெற்றுக்கொடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கத்தினால் குறைந்த எண்ணிக்கையிலான பட்டதாரிகள் மாத்திரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.