மாணவி ஒருவருடன் தவறாகநடக்க முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
குறித்த குற்றசாட்டு தொடர்பாக செட்டிகுளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிசாரால் கடந்த 8 ஆம் திகதி இரவு ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டார்.
இதன்போது நேற்று திங்கள் கிழமை(13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்றையதினம் எடுக்கப்பட்டிருந்தது இதன்போது சந்தேக நபரான ஆசிரியருக்கு பிணை வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் 6 ஆம் மாதத்திற்கு வழக்கு திகதியிடப்பட்டது.