தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய க.வி.விக்னேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையின் முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான எ.கே.ராஜன், பி.சண்முகம், அக்பர் அலி, ஹரிபரந்தாமன் ஆகியோருடன் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர்.
ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.