வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வாகனம் ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் அதே திசையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வயலுக்கு காவலுக்காக சென்றுகொண்டிருந்த ஓமந்தை பகுதியை சேர்ந்த 23, 33 வயதுடைய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.