மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வதிகின்ற மக்களின் சனத்தொகை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கும் நோக்கிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் மூன்றாவது பிள்ளைக்கான சத்துணவுக் கூப்பன்களை வழங்கும் நிகழ்வானது நேற்று நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
மாநகருக்குள் பிறக்கும் பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் கல்விச் செயற்பாடு என்பவற்றை நோக்காகக் கொண்டு 2019 ஆம் ஆண்டு முதல் பிரசவிக்கும் மூன்றாவது குழந்தைகளுக்குரிய கொடுப்பனவுகளை மட்டக்களப்பு மாநகர சபையானது வழங்கும் என மாநகர முதல்வரால் ஏற்கனவே அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட 125 குழந்தைகளுக்கான சத்துணவுக் கூப்பன்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சத்துணவுக் கூப்பன்களை வழங்கி வைத்தனர்.