Thursday 2nd of May 2024 10:35:08 AM GMT

LANGUAGE - TAMIL
குடத்தனையில் பொலிஸாருக்கு உதவிய வர்த்தகர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல்!

குடத்தனையில் பொலிஸாருக்கு உதவிய வர்த்தகர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல்!


மணல் கடத்தல் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட விசேட பொாலிஸ் குழுவினருக்கு தங்குவதற்கு வீடு கொடுத்த ழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு நடுக்குடத்தனைப் பகுதியில் விசேட பொலிஸார் தங்கியிருந்து மணல் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்துவந்தனர். இந்நிலையில் பொலிஸாருக்கு வீடு வழங்கிய வர்த்தகரின் சவுக்கங்காடு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்துக்கு நேற்றுச் சென்ற அடையாளம் தெரியாத நால்வர் அங்கு பொருள் வாங்குவது போல சென்று உரையாடியிருக்கின்றனர்.

அதன் பின்னர் அவர்கள் கொண்டு சென்ற கறித்தூள் கரைக்கப்பட்ட திரவத்தை அவரின் முகத்தில் வீசியதுடன் அவர் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

விற்பனை நிலையத்தில் இருந்த பெறுமதியான பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

காங்கேசன் துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த விசேட பொலிஸ் அணி ஒன்றுக்கே அவர் வீடு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸாருக்கு உதவி செய்தவருக்கே இவ்வாறான நிலைமை என்றால் போராட்டங்களில் ஈடுபடுபவர்களின் நிலை என்ன என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE