யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாவகச்சேரியில் நகருக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்மராட்சி பிரதேச தலைமைச் செயலகத்துக்கு முன்பான பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குழாய் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்காக ஏ-09 நெடுஞ்சாலையில் குழாய்களை புதைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அவ்வாறு குழாய்களை புதைப்பதற்காக நிலம் அகழப்பட்டபோதே குறித்த வெடிபொருட்கள் காணப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பகுதியின் பாதுகாப்புக்கான தற்காலிக எல்லை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.