Thursday 2nd of May 2024 09:08:14 AM GMT

LANGUAGE - TAMIL
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மட்டக்களப்பில் கைதான 61 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்! (படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மட்டக்களப்பில் கைதான 61 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்! (படங்கள்)


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 61பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது..

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இம்மாதம் 28ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE