நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடசியின் பொதுச் செயலாளர் அகிலாவிராஜ் கரியவாசம் தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் பல தொலைபேசி குரல் பதிவுகள் ஊடகங்களுக்கு கசிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குரல் பதிவுகளில் முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளர், பெண் நீதிபதி, மற்றும் மூத்த அதிகாரிகள் பலருடன் ரஞ்சன் ராமநாயக்க பேசுவது பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அதிகாரத்தில் இருந்தபோது நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் வகையில் நடந்துகொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.