அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் செய்வது குறித்து திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை அவர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்தியாவுக்கு பயணம் செய்ய ட்ரம்ப் ஆர்வமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைக் கவரும் நோக்கில்; ட்ரம்ப் இந்த விடயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்தியப் பயணத்துக்கான தனது விருப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க அதிகாரிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும் அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய பயணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.