புத்தளம் எலுவாங்குளம் இறால்மடுவ பகுதியில் தாய் மற்றும் பிள்ளைகள் குளிக்கச் சென்ற வேளை குளத்தல் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை 3. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஒரு பிள்ளை அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்களினால் காப்பற்றப்பட்டுள்ளார்.
இறந்தவர்கள் தாயான 45 வயது பெண், அவரது 19 வயது மகள் மற்றும் அவரது 17 வயது மகன் எனத் தெரிவிக்கப்பட்டது.
வண்ணாத்திவில்லு பொலிசார் சென்று பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.