அனுமதிப்பத்திரமின்றி சட்டத்துக்குப் புறம்பாக வைத்துள்ள ஆயுதங்களை பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரைக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சினால் பொது மன்னிப்பு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பிரதேச செயலக அலுவலகங்களில் இவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் விலகிய நபர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்கு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை பாதுகாப்பு அமைச்சால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.