Friday 17th of May 2024 07:21:06 AM GMT

LANGUAGE - TAMIL
தீர்வினை கண்டடைய இந்நாளில் பிரார்த்திப்போம் - தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்!

தீர்வினை கண்டடைய இந்நாளில் பிரார்த்திப்போம் - தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்!


நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வினை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனை பிரார்த்திப்போமாக என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர்தின திருநாளில் இன்னல்கள் பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ள எமது மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்தனை செய்கிறேன்.

மேலும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வினை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனை பிரார்த்திப்போமாக எமது பூர்விக நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து எம்மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழுந்து வளமான எதிர்காலத்தினை எமது வருங்கால சந்ததி கண்டுகொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இரா.சம்பந்தன் தலைவர் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE