யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக காணப்பட்டுவருகின்ற பருத்தித்துறை தெருமூடிமடம் புரமைக்கப்பட்ட நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
முன்னைய காலத்தில் கால்நடையாக பொருட்களைக் கொண்டு செல்பவர்களும், வண்டில்களில் செல்பவர்களும் அமர்ந்து இளைப்பாறிச் செல்வதற்காக தெருமூடி மடங்கள் அமைக்கப்பட்டதாக வரலாறுகள் சொல்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான மூன்று தெரு மூடிமடங்கள் காணப்பட்டபோதிலும் காலப் போக்கில் அவற்றில் இரண்டு அழிவடைந்துவிட்டன.
பருத்தித்துறையில் காணப்பட்ட தெருமூடி மடம் கால நீட்சியாலும் விபத்துக்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது சிதைவுகளைச் சந்தித்திருந்தது.
இந்நிலையில் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்கின்ற பருத்தித்துறை மக்களின் நிதிப்பங்களிப்பில் அது மீளவும் புனரமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.