வவுனியா, நெடுங்கேணி- சேனைப்பிலவு கிராமத்தில் சோளப்பயிர்செய்கை அறுவடை செய்வதற்கான வயல் விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நிகழ்வில் வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சகிலாபாணு, உதவி விவசாய பணிப்பாளர் திருமதி சூர்யகுமார் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் சோளச்செய்கை அறுவடை நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன், விற்பனையும் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த நெடுங்கேணி விவசாய போதனாசிரியர் சிவராம், படைப்புழு தாக்கத்திற்கு மத்தியிலும் சோளச்செய்கை அதிக வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.