எதிர்காலத்தில் அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உரையாற்றினார்,
இதன்போது, சர்வதேச அரசியல் மோதல்கள் காரணமாக எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச யுத்த சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்ததால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது.
"சமீபத்திய நாட்களில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது, ஆனால் இப்போது அரசாங்கம் எரிபொருளை இழப்பில் மட்டுமே வழங்கி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அரசுக்கு நட்டம் ஏற்படும் எனவே எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.