கனடாவின் வளர்ச்சியில் தமிழ் கனேடியர்கள் அளித்த, அளித்துவருகின்ற மகத்தான பங்களிப்புகளை நினைவு கூர்ந்து தைப் பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்று வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கனடா மற்றும் உலகம் முழுவதும் தமிழ் மக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து இன்று பாரம்பரிய தைப் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.
இந்த அறுவடை திருவிழா ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளவும், மரபுகளை கடைபிடிக்கவும் ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது.
தமிழ் கனேடியர்கள் அளித்த, அளித்துவருகின்ற மகத்தான பங்களிப்புகளை இந்த நேரத்தில் முன்னிலைப்படுத்தி நினைவு கூருகிறேன். சமூகங்களின் பன்முகத்தன்மையையும் தொடர்ந்து போற்றிக் கொண்டாடுவோம்.
மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள் எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ்-கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியும் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான அறுவடை விழாவின்போது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு நிறைந்திருக்க வாழ்த்துகிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.