பிரித்தானியாவின் பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஏனைய விடயங்களிலும் பங்களிப்புச் செய்யும் தமிழ் மக்களுடன் இணைந்து இந்தப் பொங்கலைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தமிழ் சமூகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் குடும்பத்தினர் நண்பர்களுடன் இணைந்து இன்றைய பொங்கல் விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறீர்கள்.
அறுவடையைக் கொண்டாடும் தினமாக தைப்பொங்கல் உள்ளது.
இந்நாளில் பிரித்தானியாவின் பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஏனைய விடயங்களிலும் பங்களிப்புச் செய்யும் தமிழ் மக்களுடன் இணைந்து இந்தப் பொங்கலைக் கொண்டாடுகிறோம் என தனது வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார்.
பிரித்தானியவை அனைத்து வழிகளிலும் உலகில் மிகச் சிறந்த நாடாக மாற்ற நாங்கள் உழைத்துவருகிறோம்.
இந்நிலையில் இன்று தைப்பொங்கலைக் கொண்டாடும் தமிழ் சமூகத்துக்கு மகிழ்ச்சியும், சமானதாமும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன் எனவும் பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"To our fantastic British Tamil community, and to Tamils around the world, I wish you a very happy Thai Pongal." — PM @BorisJohnson pic.twitter.com/EawjuuNRn3
— UK Prime Minister (@10DowningStreet) January 15, 2020