யாழ்ப்பாணம் மையப் பகுதியில் பௌத்த கொடியை நாட்டிய சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
நேற்று முன்தினம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக பௌத்த கொடி நாட்டப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் அந்தக் கொடி அகற்றப்பட்டிருந்த நிலையில் கொடியை ஏற்றிய நபர் யாழ்ப்பாணம் கொழும்புத் துறையைச் சேர்ந்தவர் என்றும் அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த நபர் மனநலன் குன்றியவர் என்று தெரிவித்திருக்கின்றனர்.