தைப் பொங்கல் விழாவைக் கொண்டாடும் வகையில் கனடா – ரொறன்ரோ நகரின் அதிகாரப்பூர்வமாக முப்பரிமாண ரொறன்ரோ நகரின் அடையாள பெயர்ப் பலகை இன்று மஞ்சள், சிவப்பு விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டது.
இதனை அறிவித்துள்ள ரொறன்ரோ நகர மேயர் ஜோன் டொறி, ரொறன்ரோ தமிழ் சமூகத்திற்கு மகிழ்ச்சியான தைப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
ஒன்டாரியோ மாகாணம் - ரொறன்ரோவில் உள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் ரொரன்ரோ நகரின் பெயரை அறிவிக்கும் அதிகாரபூர்வ முப்பரிமாண வர்ண விளக்குகளால் ஆன அறிவித்தல் சமிக்ஞை உள்ளது. இது பொதுவாக ரொறன்ரோவின் அடையாளம் என அழைக்கப்படுகிறது.