Friday 17th of May 2024 04:01:08 AM GMT

LANGUAGE - TAMIL
தைப்பொங்கல் நாளில் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்!

தைப்பொங்கல் நாளில் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்!


தைப்பொங்கல் நாளில் யாழ்ப்பாணம் நகருக்கு அண்மித்த பகுதியில் வாள்வெட்டு வன்முறைக்குழு மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலாளிகள் பயணித்த மோட்டார்சைக்கிள்கள் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த கொட்டடிப் பகுதிக்கு மூன்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாமல் ஏழுபேர் வாள்களுடன் சென்று அங்கிருந்த இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அங்கிருந்தவர்களும் கூச்சலிட கிராம மக்கள் ஒன்று திரண்டு தாக்குதலாளிகளைத் துரத்திய நிலையில் அவர்கள், தாங்கள் பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்களையும் கைவிட்டுவிட்டு தப்பி ஓடியிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிராம மக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் நாவாந்துறை அல்லது பொம்மைவெளிப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கொட்டடி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE