Friday 17th of May 2024 02:50:55 AM GMT

LANGUAGE - TAMIL
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினர் - மக்கள் முறுகல்!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினர் - மக்கள் முறுகல்!


யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண் நிலையை அடுத்து நால்வர் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் கிராமம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த இரவு இராணுவத்தினருக்கும் நாகர்கோவில் பகுதி இளைஞர்கள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முறுகல் நிலையாக மாறியதாகவும் அதன் பின்னர் இராணுவத்தினரால் நால்வர் பிடிக்கப்பட்டு பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை அந்தக் கிராமம் இராணுவத்தினரால் முழுமையாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக அங்கு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக தகவல்களுக்காக அருவி இணையத்துடன் இணைந்திருங்கள்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE