கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இரவு வேளையில் இங்கிலாந்தில் டராம் நகரில் சுற்றித்திரிந்தமையால் சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவர்களுக்கு தற்காலிக போட்டித் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், நிரோஷன் திக்வெல்ல ஆகியோரே கடந்த இரவு இங்கிலாந்து வீதிகளில் விதி மீறல்களை மீறிச் சுற்றித்திருந்ததால் சர்ச்சையில் சிக்கினர்.
இந்நிலையில் அவர்கள் மூவரையும் உடனடியாக நாட்டுக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ள இலங்கை கிரிகெட் சபை அவர்களுக்கு தற்காலிக போட்டித்தடை விதிப்பது என்றும் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நிறைவடையும் வரையில் அவர்களுக்கான தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை