Wednesday 24th of April 2024 05:48:12 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா அச்சுறுத்தல் நிலை: இலங்கை-இந்திய கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்தி வைப்பு!

கொரோனா அச்சுறுத்தல் நிலை: இலங்கை-இந்திய கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்தி வைப்பு!


இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி குழாமில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் சில நாட்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி இலங்கை வந்துள்ளது.

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ஒரு நாள் போட்டித் தொடரை இம்மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது போட்டியை 21 ஆம் திகதிக்கும், இறுதி போட்டியை 24 ஆம் திகதிக்கும் ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டி20 போட்டிகள் இம்மாதம் 26, 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவர் மற்றும் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி நிரோஷன் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறு போட்டித் தொடரை சில நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய போட்டித் தொடர் அட்டவணை

ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர்

1வது ஒரு நாள் போட்டி - ஜூலை-18

2வது ஒரு நாள் போட்டி - ஜூலை-21

3வது ஒரு நாள் போட்டி - ஜூலை-24

ரீ-20 சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்

1வது ரீ-20 போட்டி - ஜூலை-26

2வது ரீ-20 போட்டி - ஜூலை-28

3வது ரீ-20 போட்டி - ஜூலை-31


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE